sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., பைல்ஸ் -3: அண்ணாமலை வெளியிட்ட 3வது ஆடியோ

/

தி.மு.க., பைல்ஸ் -3: அண்ணாமலை வெளியிட்ட 3வது ஆடியோ

தி.மு.க., பைல்ஸ் -3: அண்ணாமலை வெளியிட்ட 3வது ஆடியோ

தி.மு.க., பைல்ஸ் -3: அண்ணாமலை வெளியிட்ட 3வது ஆடியோ


UPDATED : ஜன 27, 2024 06:11 PM

ADDED : ஜன 27, 2024 05:48 PM

Google News

UPDATED : ஜன 27, 2024 06:11 PM ADDED : ஜன 27, 2024 05:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க., எம்.பி., ஆ.ராசா - முன்னாள் டிஜிபி ஜாபர்சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ள தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று என்ற மற்றொரு ஆடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2023 ஏப்., 14ல், தி.மு.க., பைல்ஸ் பாகம் ஒன்று வெளியிட்டார். அதில் தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.அதை தொடர்ந்து, ஜூலை மாதம் தி.மு.க., பைல்ஸ் பாகம் இரண்டு வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடலை வெளியிட்டு இருந்தார். பிறகு கடந்த 17ம் தேதி, 2வது ஆடியோ எனக்கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் ஜாபர் சேட் பேசிய ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று 3 வது வீடியோவை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இந்த ஆடியோவில் ஆ.ராசா மற்றும் ஜாபர்சேட் பேசி உள்ளனர்.

அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:3வது டேப்: தி.மு.க., எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மற்றும் முன்னாள் உளவுத்துறை டிஜிபி ஜாபர் சேட் இடையிலான உரையாடல் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட கதைகளை வைத்து ஒருமித்து சி.பி.ஐ., விசாரணையை தடம் மாற செய்தனர். அமைச்சர் விரும்பியவர்களுக்கே ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us