ADDED : டிச 18, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தி.மு.க., தலைமை செயற்குழுக் கூட்டம், வரும் 22ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., தலைமை செயற்குழுக் கூட்டம், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டம், வரும் 22ம் தேதி காலை 11:00 மணிக்கு, அறிவாலயத்தில் உள்ள அரங்கில் நடக்க உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிப்பார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.