sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தி.மு.க.,வின் ஊதுகுழல் பழனிசாமி' பன்னீர் குற்றச்சாட்டு

/

'தி.மு.க.,வின் ஊதுகுழல் பழனிசாமி' பன்னீர் குற்றச்சாட்டு

'தி.மு.க.,வின் ஊதுகுழல் பழனிசாமி' பன்னீர் குற்றச்சாட்டு

'தி.மு.க.,வின் ஊதுகுழல் பழனிசாமி' பன்னீர் குற்றச்சாட்டு


ADDED : பிப் 16, 2024 10:10 PM

Google News

ADDED : பிப் 16, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையில், இரட்டை நிலைப்பாட்டை எடுத்து, தி.மு.க.,வின் ஊதுகுழலாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி செயல்படுகிறார்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த 2022ல் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, 'ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில், 2024ல் சட்டசபைக்கு தேர்தல் வரும். இன்னும், 27 அமாவாசைகள் தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும்' என, கூறியவர் பழனிசாமி.

'ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொள்கையை, அ.தி.மு.க., ஆதரிக்கிறது. இது, கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும்.

இது நடைமுறைக்கு வந்தால், ஜனரஞ்சக திட்டங்களை விட, வளர்ச்சியே மிக முக்கியமாக இருக்கும்' என, கடந்த ஆண்டு செப்டம்பரில், தன், 'எக்ஸ்' பதிவில் பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்த கொள்கையிலிருந்து, தற்போது 'அந்தர்பல்டி' அடித்திருக்கிறார். இதற்கு எதிரான தீர்மானம், அ.தி.மு.க., ஆதரவுடன் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து தி.மு.க.,வுடன் பழனிசாமி கைகோர்த்து விட்டது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

எந்த தி.மு.க., என்கிற தீய சக்தியை எதிர்த்து, எம்.ஜி.ஆர்., கட்சியை துவக்கினாரோ, ஜெயலலிதா கட்சியை வளர்த்தாரோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, தி.மு.க.,வுடன் கைகோர்த்திருப்பது, ரகசிய உடன்பாடு செய்திருப்பது, வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு அடையாளம்.

பழனிசாமி சுயநலத்திற்காக தி.மு.க.,விடம் சரணாகதி அடைந்து விட்டார். கட்சியின் தனித்தன்மை தாரை வார்க்கப்பட்டு விட்டது.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us