sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., கூட்டணி தேவையா? கருத்து கேட்டு நட்டா கடிதம்!

/

அ.தி.மு.க., கூட்டணி தேவையா? கருத்து கேட்டு நட்டா கடிதம்!

அ.தி.மு.க., கூட்டணி தேவையா? கருத்து கேட்டு நட்டா கடிதம்!

அ.தி.மு.க., கூட்டணி தேவையா? கருத்து கேட்டு நட்டா கடிதம்!


UPDATED : ஜன 10, 2024 04:32 AM

ADDED : ஜன 09, 2024 10:31 PM

Google News

UPDATED : ஜன 10, 2024 04:32 AM ADDED : ஜன 09, 2024 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசியல் கள நிலவரம் எப்படி உள்ளது; அ.தி.மு.க., கூட்டணி வேண்டுமா; தனித்து போட்டியிடலமா; மற்ற கட்சிகளின் நிலை உள்ளிட்டவை தொடர்பாக, பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ.,வில் உள்ள, 15 முக்கிய மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள், தங்களின் கருத்தை எழுதி, மூடி சீலிட்டப்பட்ட கவரில், டில்லிக்கு தபாலில் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகளுக்கு, 12 - 13 கேள்விகளுக்கு பதில்கள் அளிக்குமாறு, கட்சி மேலிடம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டு சதவீதம் எவ்வளவு உயர்ந்திருக்கும் என கணிக்கப்படுகிறது; லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடலாமா; சிறிய கட்சிகளின் நிலை என்ன; அ.தி.மு.க.,வுடனான உறவு எப்படி உள்ளது; அக்கட்சியோடு கூட்டணி அமைப்பது சாத்தியமா என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

நிர்வாகிகளும் தங்களின் கருத்தை விரிவாக எழுதி, நட்டாவுக்கு அனுப்பி விட்டனர். அதன் அடிப்படையில், கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது என தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறின.






      Dinamalar
      Follow us