உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 23, 2024 02:02 AM
அ நிறம் | அளவு
கொரோனா பரவலுக்கு பின், நாட்டில் அடுத்தடுத்து பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்க வேண்டிய கடமை, மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களுக்கு உள்ளது.
தொழில் நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், மூத்த டாக்டர்களின் அனுபவத்தை பெறுவதுடன், மருத்துவத் துறையில் அடுத்தடுத்து புதிய கண்டுபிடிப்புகளை, இளம் டாக்டர்கள் அறிமுகப்படுத்த வேண்டும்.
தற்போதுள்ள நிலையில், மருத்துவத் துறையில் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் வரவேற்க வேண்டும். மாணவர்களின் ஆராய்ச்சிகள், எதிர்கால மருத்துவத்திற்கு தேவையானவை. பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுவதாக எழும் புகார்கள் முற்றிலும் தவறானவை; வதந்திகளை நம்ப வேண்டாம்.
- டாக்டர் ராதாகிருஷ்ணன்
செயலர், கூட்டுறவு துறை
