sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வட சென்னை இளைஞர்கள் மீது தவறான முத்திரை குத்துவதா? ஐகோர்ட் நீதிபதிகள் கண்டிப்பு

/

வட சென்னை இளைஞர்கள் மீது தவறான முத்திரை குத்துவதா? ஐகோர்ட் நீதிபதிகள் கண்டிப்பு

வட சென்னை இளைஞர்கள் மீது தவறான முத்திரை குத்துவதா? ஐகோர்ட் நீதிபதிகள் கண்டிப்பு

வட சென்னை இளைஞர்கள் மீது தவறான முத்திரை குத்துவதா? ஐகோர்ட் நீதிபதிகள் கண்டிப்பு

10


ADDED : அக் 04, 2024 08:35 AM

Google News

ADDED : அக் 04, 2024 08:35 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வட சென்னை இளைஞர்கள் மீது தவறான முத்திரை குத்த வேண்டாம்' என வக்கீலுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பார் கவுன்சில் பதிவுக்கான விண்ணப்பத்தை நிராகரித்ததால் வந்த மிரட்டல்களையடுத்து மூத்த வக்கீல் சிங்காரவேலனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் ​​வக்கீல் எஸ்.தமிழரசன் முறையிட்டார்.

'வட சென்னை இளைஞர்களின் பதிவு விண்ணப்பத்தை நிராகரித்ததால், சிங்காரவேலன் தம் உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டார்' என்று குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, 'பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும், சிறப்பு புலனாய்வு குழு கிட்டத்தட்ட 200 வட சென்னை இளைஞர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் மீண்டும் வடசென்னை இளைஞர்கள் என்றும், வடசென்னை வக்கீல்கள் என்றும் குறிப்பிட்டதால், நீதிபதிகள் கோபம் அடைந்தனர்.

இது பற்றி நீதிபதிகள் கூறுகையில், 'வட சென்னை இளைஞர்கள் மீது தவறான முத்திரை குத்த வேண்டாம். வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்காக இருந்தாலும் சரி, அனைவரும் நாம் வசிக்கும் அதே சென்னை நகரத்தின் குடியிருப்பாளர்கள் தான்' என வக்கீலுக்கு அறிவுரை வழங்கினர்.






      Dinamalar
      Follow us