நெல்லையில் இரட்டைக் கொலை; மாமனார், மாமியாரை கொன்ற கொடூர மருமகன்!
நெல்லையில் இரட்டைக் கொலை; மாமனார், மாமியாரை கொன்ற கொடூர மருமகன்!
ADDED : ஜன 20, 2025 08:31 AM

திருநெல்வேலி: நெல்லை அருகே அரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்த, தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மாமனார், மாமியாரை மருமகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சார்ந்தவர் பாஸ்கர்(55) மற்றும் அவரது மனைவி செல்வராணி(53). இவர்களுக்கு ஜெனிபர்(30) என்ற மகள் இருக்கிறார். ஜெனிபர் அதே தெருவை சேர்ந்த மரிய குமார்(36) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் செல்வகுமாருக்கும் அவரது மனைவி ஜெனிபருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தனியாகப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வட நாட்டைச் சேர்ந்த வேறு ஒருவரை காதலித்து, அவருடன் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மரியக்குமார் அவரது மாமனார் பாஸ்கர் மற்றும் மனைவி செல்வராணியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
தம்பதியை வெட்டிக் கொலை செய்ததாக மருமகன் மரியக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக மாமனார் பாஸ்கர், மாமியார் செல்வராணியை மருமகன் மரியகுமார் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.