sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதுக்கோட்டையில் இரட்டைக்கொலை; தனிப்படைகள் அமைத்து விசாரணை

/

புதுக்கோட்டையில் இரட்டைக்கொலை; தனிப்படைகள் அமைத்து விசாரணை

புதுக்கோட்டையில் இரட்டைக்கொலை; தனிப்படைகள் அமைத்து விசாரணை

புதுக்கோட்டையில் இரட்டைக்கொலை; தனிப்படைகள் அமைத்து விசாரணை

1


ADDED : ஜூலை 25, 2025 01:45 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:45 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்றிரவு ஆவுடையார்கோவில் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியில் இருவர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான கண்ணன்,35, கார்த்திக்,29, என்பது தெரிய வந்தது. இருவரையும் கொலை செய்ததற்கான காரணம் என்ன? கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் இரட்டைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவுடையார் கோவில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அண்ணன், தம்பி கொலையைக் கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.






      Dinamalar
      Follow us