sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓடும் பஸ்சில் நெஞ்சு வலி ஏற்பட்டு டிரைவர் பலி: உயிர் தப்பிய 60 பயணிகள்

/

ஓடும் பஸ்சில் நெஞ்சு வலி ஏற்பட்டு டிரைவர் பலி: உயிர் தப்பிய 60 பயணிகள்

ஓடும் பஸ்சில் நெஞ்சு வலி ஏற்பட்டு டிரைவர் பலி: உயிர் தப்பிய 60 பயணிகள்

ஓடும் பஸ்சில் நெஞ்சு வலி ஏற்பட்டு டிரைவர் பலி: உயிர் தப்பிய 60 பயணிகள்

8


ADDED : ஜூலை 16, 2025 10:19 PM

Google News

8

ADDED : ஜூலை 16, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவருக்கு நடுவழியில் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் டிரைவர் உயிரிழந்தார்.பயணிகள் உயிர்தப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஸ்டாண்டிலிருந்து செம்மறிகுளத்திற்கு அரசு நகர பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று( ஜூலை 16) இரவு7:00 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை குலசேகரன்பட்டணம் வடக்கூரை சேர்ந் ஜெயசிங் மகன் அல்டாப் (48) ஓட்டினார்.

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை தாண்டி அரசு பஸ் வரும் போது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இடது ஓரமாக சென்று தனியார் மண்டபம் முன்பிருந்த மின்கம்பத்தில் மோதியது. அப்போது ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீதும், அந்த வழியாக நடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளர் தினேஷ் என்பவர் மீதும் அரசு பஸ் மோதியது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அரசு பஸ் டிரைவர், வட மாநில தொழிலாளியையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்து 60 மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தினேஷூக்கு தோள் மற்றும் இரண்டு காதுகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த டிரைவர் அல்டாப்புக்கு ஜெனட் என்ற மனைவியும் ஜெனி, ஜெரினா என இரண்டு மகள்கள் உள்ளனர். மின்கம்பத்தில் மோதியதை தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரியத்தினர் விரைந்து வந்து ஜேசிபி உதவியுடன் உடன் பஸ்சை அகற்றி மின் வழித்தடத்தை சீரமைத்தனர். அரசு பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us