ADDED : மார் 13, 2024 10:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.
சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட தி.மு.க.,வின் முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் டில்லியில் மார்ச்9 ல் கைது செய்யப்பட்டார். அவரை, மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், ஏழு நாள் காவலில் எடுத்து டில்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உணவுப்பொருட்களுடன் போதைப்பொருட்களை கலந்து கடத்தலுக்கு உதவிய ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதானந்தம் என்ற சதா என்பவரை, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

