போதையில் கார் ஓட்டி விபத்து பெண், குழந்தை பரிதாப பலி
போதையில் கார் ஓட்டி விபத்து பெண், குழந்தை பரிதாப பலி
ADDED : ஜன 15, 2024 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், முருகம்பாளையத்தை சேர்ந்தவர் முகுந்தன், 30; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 20. தம்பதிக்கு, பிருத்விக் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தார்.
பொங்கல் பண்டிகையொட்டி மூவரும் நேற்று மதியம் திருப்பூரில் இருந்து டூ - வீலரில் சொந்த ஊரான சேலம், மேட்டூருக்கு புறப்பட்டனர்.
ஊத்துக்குளி, புலவர்பாளையம் அருகே சென்ற போது, விஜயமங்கலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த கார், டூ- வீலர் மீது மோதி, அங்கிருந்த நுால் மில்லுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 3 வயது குழந்தை பியூட்டி குமாரி மீதும் மோதியது. இதில், குழந்தை பியூட்டி குமாரி, சத்யா சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
முகுந்தன், பிருத்விக் படுகாயடைந்தனர். போதையில் காரை இயக்கிய விக்னேஷ், 30, போலீசில் சிக்கினார்.