தமிழகத்தில் பிப்.,6 - பிப்.,9 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம் அறிக்கை
தமிழகத்தில் பிப்.,6 - பிப்.,9 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம் அறிக்கை
UPDATED : பிப் 04, 2024 02:11 PM
ADDED : பிப் 04, 2024 01:26 PM

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் பிப்.,6ம் தேதி முதல் பிப்.,9ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பிப்.,10ம் தேதி லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் பிப்.,6ம் தேதி முதல் பிப்.,9ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.