தமிழகத்தில் பிப்.,20ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம் அறிக்கை
தமிழகத்தில் பிப்.,20ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம் அறிக்கை
UPDATED : பிப் 14, 2024 03:25 PM
ADDED : பிப் 14, 2024 01:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் பிப்.,20ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (பிப்.,14) முதல் பிப்.,20ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

