sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க. கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய கும்பல்: போலீஸ் சொல்வது இதுதான்!

/

தி.மு.க. கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய கும்பல்: போலீஸ் சொல்வது இதுதான்!

தி.மு.க. கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய கும்பல்: போலீஸ் சொல்வது இதுதான்!

தி.மு.க. கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய கும்பல்: போலீஸ் சொல்வது இதுதான்!

80


ADDED : ஜன 31, 2025 03:33 PM

Google News

ADDED : ஜன 31, 2025 03:33 PM

80


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்த பெண்களை அச்சுறுத்திய சம்பவத்தில் நடந்தது என்ன என்பது பற்றி பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் கூறி உள்ளார்.

சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஒன்றில் பெண்கள் உள்ளிட்டோரை நள்ளிரவில் தி.மு.க., கொடி கட்டிய காரில் வந்தவர்கள் துரத்தி அச்சுறுத்தியதாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும் எழுந்தன.

இதையடுத்து, விசாரணை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறினார். நடந்த சம்பவம் என்ன என்பது குறித்து அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு;

புலன் விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது 7 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இன்னும் 3 பேர் கைது செய்யப்பட இருக்கின்றனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது.

முட்டுக்காட்டுக்கு காரில் வந்த பெண்கள், பின்னர் திரும்பும் போது அங்கு 2 கார்களில் வந்தவர்கள் துரத்தியதாக கூறுகின்றனர். அது பற்றி தான் விசாரணை நடத்தி வருகிறோம். பாலியல் ரீதியான துன்புறுத்தல் காரணமாக அவர்கள் துரத்தப்பட்டதாக புலன்விசாரணையில் தெரியவில்லை. வண்டி இடித்துவிட்டதால் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. முழு புலன் விசாரணையில்தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.

புகார்தாரரை அழைத்து வந்து விசாரித்துவிட்டோம். காரில் துரத்தியவர்கள் யாரும் மது போதையில் இருக்கவில்லை. காரில் கட்டப்பட்ட கட்சிக்கொடிக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த காரை ஓட்டிய டிரைவர் தான் கொடியை பயன்படுத்தி உள்ளார்.

பார்க்கிங், டோல்கேட் கட்டணத்தை தவிர்க்கவே கட்சிக் கொடியை கட்டி இருப்பது தெரிய வந்திருக்கிறது. வேறு எந்த நோக்கத்துக்காகவும் கொடி கட்டப்படவில்லை. சம்பவத்தில் தொடர்புடையவர்களில் 6 பேர் குறிப்பிட்ட ஒரு கல்லூரியில் இங்கு படிக்கின்றனர். ஒருவர் வெளிமாநில கல்லூரியில் படிக்கிறார். மற்றொருவர் படித்து முடித்து விட்டு வேலை பார்க்கிறார்.

சந்துரு என்ற நபர் மீது 2 குற்ற வழக்குகள் இருக்கின்றன. அது பற்றியும் புலன் விசாரணை நடந்து வருகிறது. வழிப்பறி நோக்கம் எதுவும் இல்லை. முட்டுக்காடு வந்து திரும்பும் போது தான் இப்படி நடந்திருக்கிறது. புகார்தாரர்களை ஏன் அந்த இரவில் அங்கு சென்றனர் என்று காவல்துறையினர் யாரும் கேட்கவில்லை. அவர்கள் அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

கிழக்கு கடற்கரை சாலையில் போதிய பாதுகாப்பும், கண்காணிப்பும் உள்ளது. புகார்தாரர் தகவல் தெரிவித்த 10 நிமிடத்தில் போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 கார்களில் ஒரு வண்டி 2012ம் ஆண்டு முதல் பல பேரின் கைமாறி இருக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட 2 கார்களில் ஒரு வாகனத்தை அனிஷ் என்பவரிடம் வாங்கிய சந்துரு, அதன் உரிமையாளரிடம் தராமல் ஏமாற்றிக் கொண்டு ஓட்டி இருக்கிறார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பின்னரே முழு விவரங்களும் தெரியவரும்.

சம்பவம் தொடர்பாக புகார்தாரர் மனு மீது எவ்வித தாமதமும் செய்யவில்லை. புகாரை பெற்று, அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us