டெய்லி பேப்பரை திறந்தாலே இதுதான்... முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., கண்டனம்!
டெய்லி பேப்பரை திறந்தாலே இதுதான்... முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., கண்டனம்!
ADDED : செப் 09, 2024 03:53 PM

சென்னை: தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவு தமிழகத்தில் கொலைகள் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த விடியா தி.மு.க., அரசின் மூன்றாண்டு சாதனை.
வெளிநாட்டில் அமர்ந்தபடி கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்திய முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா?
தனது பிரதானப் பணிகளையே மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சீரழியும் சட்டம் ஒழுங்கை இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.