ADDED : ஜன 09, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி அருகே மாங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா, 90. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு தவறான நோக்கத்துடன் சென்றார்.
இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. மூதாட்டி அரிவாளால் கருப்பையாவை வெட்டினார். காயமடைந்த கருப்பையா, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார்.
மதகுபட்டி போலீசார் கூறுகையில் 'மூதாட்டியும், முதியவரும் பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள். மூதாட்டி கணவரை பிரிந்து தனியாக வசிக்கிறார். இருவருக்கும் ஏற்கனவே பிரச்னை இருந்தது. மூதாட்டி மீது குற்றமற்ற கொலை வழக்கு பதிந்துள்ளோம்' என்றனர்.