sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் இணைப்பிற்கு ரூ.1,500 லஞ்சம் பெண் வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது

/

மின் இணைப்பிற்கு ரூ.1,500 லஞ்சம் பெண் வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது

மின் இணைப்பிற்கு ரூ.1,500 லஞ்சம் பெண் வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது

மின் இணைப்பிற்கு ரூ.1,500 லஞ்சம் பெண் வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது


ADDED : ஜூலை 13, 2011 01:40 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : திண்டிவனம் அருகே விவசாயியிடம் 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐய்யப்பன். விவசாயி. தனது விவசாய மோட்டாருக்கு மின் இணைப்பு பெற விண்ணப்பத்தில் கையொப்பம் கேட்டு பேரணி கிராம நிர்வாக அதிகாரி அன்பழகியிடம் கொடுத்திருந்தார். அதற்கு அன்பழகி 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஐய்யப்பன் புகார் கூறினார்.



லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., (பொறுப்பு) திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் நேற்று காலை பேரணி வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது ஐய்யப்பன் விண்ணப்பத்துடன் சென்று லஞ்சப் பணம் 1,500 ரூபாயை கிராம உதவியாளர் பரமசிவத்திடம் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அதிகாரி அன்பழகி,56, கிராம உதவியாளர் பரமசிவம்,47 ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.








      Dinamalar
      Follow us