/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்கம்பம் உடைந்து போக்குவரத்து பாதிப்பு
/
மின்கம்பம் உடைந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 18, 2026 04:48 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மேம்பாலம் பணிக்கு மண் கொட்டியபோது டிப்பர் லாரி மின் கம்பியில் சிக்கி கம்பம் உடைந்ததில் போக்குவரத்து பாதித்தது.
விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை 5:30 மணிக்கு டிப்பர் லாரி சாலை நடுவே மண் கொட்டிய போது டிப்பர் மின் கம்பியில் சிக்கியதில் கம்பம் உடைந்து சாலை நடுவே விழுந்தது.
இதையடுத்து சென்னை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்த போக்குவரத்து போலீசார் டோல்கேட் ஊழியர்கள் உதவியுடன் மின் கம்பத்தை அகற்றி சாலையை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
இதனால் அப்பகுதியில் மாலை 6:15 மணி வரை 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

