உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 17, 2026 02:59 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் உள்ளது.
இதை, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில், தமிழகம் முழுதும் வசிக்கும் மக்கள் தொடர்பு கொண்டு மின் தடை, அதிக மின் கட்டணம் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை, 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். அங்கு தெரிவிக்கப்படும் புகார், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், மின்னகம் சேவை மைய மொபைல் போன் எண் இயங்கவில்லை. இதனால், மின் தடை தொடர்பாக புகார் அளிக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
