ADDED : ஆக 09, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஊதிய உயர்வு வழங்கப்படும் வரை, இடைக்கால நிவாரணமாக மாதம், 5,000 ரூபாய் தருமாறு, மின் வாரியத்திற்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:
ஊதிய உயர்வு தொடர்பான முதற்கட்ட பேச்சு முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சை விரைவில் துவக்கி, புதிய ஊதியத்தை நிர்ணயம் செ ய்ய வேண்டும்.
பேச்சு நடத்துவதை காரணம் காட்டி, ஊதிய உயர்வு வழங்குவதை இழுத்தடிக்க கூடாது. ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்படும் வரை, இடைக்கால நிவாரணமாக மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.