sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'வெற்று அறிக்கைகள் நம்பிக்கையை தராது!'

/

'வெற்று அறிக்கைகள் நம்பிக்கையை தராது!'

'வெற்று அறிக்கைகள் நம்பிக்கையை தராது!'

'வெற்று அறிக்கைகள் நம்பிக்கையை தராது!'

6


ADDED : நவ 14, 2024 12:24 AM

Google News

ADDED : நவ 14, 2024 12:24 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, நேரடியாக குறிப்பிடாமல், அரசின் சார்பில் வெற்று அறிக்கைகள் வருவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாது' என, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சங்கத் தலைவர் வெங்கடேசன், இணை பொதுச் செயலர் லெனின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 8ம் தேதி நடந்த, பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

அதில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை; நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே தேர்தலுக்குள் நிறைவேற்ற, முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல் பரவியது.

இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம், கானல் நீராக போய் விடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, நேரடியாக குறிப்பிடாமல், அரசின் வாயிலாக வெற்று அறிக்கைகள் வருவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாது.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்ற மனநிலைக்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us