''சுய லாபத்திற்காக அ.தி.மு.க.,வை இ.பி.எஸ்., அழித்துக் கொண்டிருக்கிறார்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., குறித்து விமர்சிக்க, ''ஏதோ தான் வந்த பிறகுதான், பா.ஜ., வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை அண்ணாமலை உருவாக்கியுள்ளார். அவர், தினமும் பேட்டி கொடுத்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறாரே தவிர, கட்சியை வளர்த்தபாடில்லை,'' என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் இ.பி.எஸ்.,