sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக அரசின் அலட்சியத்தால் அணிவகுப்பு ஊர்தி இடம்பெறவில்லை; இ.பி.எஸ். குற்றச்சாட்டு

/

தமிழக அரசின் அலட்சியத்தால் அணிவகுப்பு ஊர்தி இடம்பெறவில்லை; இ.பி.எஸ். குற்றச்சாட்டு

தமிழக அரசின் அலட்சியத்தால் அணிவகுப்பு ஊர்தி இடம்பெறவில்லை; இ.பி.எஸ். குற்றச்சாட்டு

தமிழக அரசின் அலட்சியத்தால் அணிவகுப்பு ஊர்தி இடம்பெறவில்லை; இ.பி.எஸ். குற்றச்சாட்டு


ADDED : டிச 22, 2024 10:28 PM

Google News

ADDED : டிச 22, 2024 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி இடம்பெறாததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அ.தி.மு.க., ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.

ஆனால் விடியா தி.மு.க., அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன். தமிழக அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us