தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கனமழையால் பயிர்கள் சேதம்! விவசாயிகளுக்கு இழப்பீடு தர இ.பி.எஸ். வலியுறுத்தல்

கனமழையால் பயிர்கள் சேதம்! விவசாயிகளுக்கு இழப்பீடு தர இ.பி.எஸ். வலியுறுத்தல்

கனமழையால் பயிர்கள் சேதம்! விவசாயிகளுக்கு இழப்பீடு தர இ.பி.எஸ். வலியுறுத்தல்


ADDED : நவ 27, 2024 01:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 01:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கனமழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை;

தமிழகம் முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us