sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரோடு இடைத்தேர்தல்; தி.மு.க., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

/

ஈரோடு இடைத்தேர்தல்; தி.மு.க., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தல்; தி.மு.க., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தல்; தி.மு.க., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

7


ADDED : ஜன 17, 2025 01:16 PM

Google News

ADDED : ஜன 17, 2025 01:16 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி இன்று (ஜன.,17) வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி, காங்கிரஸ் கட்சி வசம் இருந்தது. முதலில் திருமகன் ஈ.வெ.ரா., வென்ற இந்த தொகுதியில், அவரது மறைவுக்கு பிறகு ஈ.வேகே.எஸ்., இளங்கோவன் வென்றார். அவர் காலமான நிலையில், இந்த முறை தி.மு.க., போட்டியிடுகிறது. தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (ஜன.,17) தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க.,- பா.ஜ., போட்டியில் இருந்து ஒதுங்கி, தேர்தலை புறக்கணித்து உள்ளன. தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.

சந்திரகுமார் ஆளுங்கட்சி வேட்பாளர் என்பதால் அவருக்கு தான் வெற்றி என்ற சூழலே கள நிலவரமாக உள்ளது. அதுமட்டுமின்றி தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களும் சந்திரகுமாருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க உள்ளனர். இதற்கிடையே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமிக்கு ஆதரவாக, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களத்தில் இறங்கி தீவிர பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சி மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us