இடைத்தேர்தலில் முன்னிலை: காங்., அலுவலகம் காலை '‛நிசப்தம்'': மதியம் ‛‛சப்தம்''
இடைத்தேர்தலில் முன்னிலை: காங்., அலுவலகம் காலை '‛நிசப்தம்'': மதியம் ‛‛சப்தம்''
UPDATED : மார் 02, 2023 12:12 PM
ADDED : மார் 02, 2023 10:23 AM

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற போதும், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டது. மதியம் 11:30 மணிக்கு மேல் வந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கட்சியின் வெற்றியை கொண்டாட ஒருவர் கூட வரவில்லை. இதற்கு மாறாக, திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று( மார்ச் 2) எண்ணப்பட்டு வருகிறது. அதில் துவக்கம் முதலே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
பொதுவாக பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் எதுவாக இருந்தாலும், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலை பெற்ற தகவல் வந்ததுமே அக்கட்சிகளின் தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் ஒன்று கூடி ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன், இனிப்புகள் வழங்கி கொண்டாடுவார்கள். பல மாவட்டங்களிலும் எதிரொலிக்கும். மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.



