ADDED : பிப் 22, 2024 02:36 AM
''சட்டசபையை 100 நாட்கள் நடத்துவதாக கூறிவிட்டு, இப்போது 100 மணி நேரம் கூட பேச அனுமதிப்பதில்லை,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புகார் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பழனிசாமி: ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 100 நாட்கள் சட்டசபையை நடத்துவதாக கூறினீர்கள். இப்போது, 100 மணி நேரம் கூட சபையை நடத்துவதில்லை. பட்ஜெட் குறித்து ஒரே நாள் விவாதம் வைத்தால் எப்படி பேச முடியும்?
சபாநாயகர் அப்பாவு: மானிய கோரிக்கை ஒவ்வொரு நாளும் நடக்கும்.
பழனிசாமி: மானிய கோரிக்கையில் 5 நிமிடம் வழங்கினால், ஒரு துறை குறித்து எப்படி பேச முடியும்?
சபாநாயகர்: வாய்ப்பு தர மாட்டோம் என்று மறுக்கவில்லை. உங்கள் ஆட்சியில் சட்டசபை ஒரு நாள், இரண்டு நாள் கூட நடந்த வரலாறு உள்ளது.
பழனிசாமி: கொரோனா காலத்தை தவிர்த்து, போதுமான இடைவெளி விட்டு சபையை நடத்தியுள்ளோம். எதிர்க்கட்சிகள் கூறிய பிரச்னைகளை கேட்டு தீர்த்து வைத்தோம்.
அமைச்சர் துரைமுருகன்: அலுவல் ஆய்வு கூட்டத்தில், என்ன முடிவு செய்யப்படுகிதோ, அதன்படிதான் நாங்கள் நடந்து கொள்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.