sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட மிரட்டலும், கொலையும் தான் பதிலா? தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி

/

ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட மிரட்டலும், கொலையும் தான் பதிலா? தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி

ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட மிரட்டலும், கொலையும் தான் பதிலா? தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி

ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட மிரட்டலும், கொலையும் தான் பதிலா? தி.மு.க., அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி

37


ADDED : பிப் 03, 2025 10:15 AM

Google News

ADDED : பிப் 03, 2025 10:15 AM

37


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழ்நாட்டில் ஒரு ஏ.டி.ஜி.பி.,யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், தி.மு.க., ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டி.ஜி.பி., கல்பனா நாயக் ஐ.பி.எஸ் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.'சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்' என்ற அவரின் கூற்று நெஞ்சை பதற செய்கிறது.

தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது. இந்த செயலுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் ஒரு ஏ.டி.ஜி.பி.,யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?

இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளை தைரியமாக சொல்ல முடியும்? ஏ.டி.ஜி.பி., உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது முதல்வர் ஸ்டாலின், தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி! இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு தி.மு.க., அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை தி.மு.க., அரசு உறுதி செய்ய வேண்டும். உடனடியாக ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக்கின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us