sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இது கூட தெரியலை; சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார்: அமைச்சர் மா.சு., சுளீர்

/

இது கூட தெரியலை; சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார்: அமைச்சர் மா.சு., சுளீர்

இது கூட தெரியலை; சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார்: அமைச்சர் மா.சு., சுளீர்

இது கூட தெரியலை; சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார்: அமைச்சர் மா.சு., சுளீர்

11


ADDED : நவ 07, 2024 11:46 AM

Google News

ADDED : நவ 07, 2024 11:46 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்: 'மருத்துவமனை முதல்வர் பணியிடம் நிரப்பவில்லை எனும் சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார். அரசியல் கட்சியை சேர்ந்த சீமான் இது கூட தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடலூரில் நிருபர்கள் சந்திப்பில், மா. சுப்பிரமணியன் கூறியதாவது: காய்ச்சல் பாதிப்பு யாருக்கு ஏற்பட்டாலும், அருகில் உள்ள மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தில் 8,713 சுகாதார நிலையங்கள் இருக்கிறது. 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது.

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, என மருத்துவ கட்டமைப்பு உள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் மருத்துவத் துறையில் 18,460 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் 2,553 மருத்துவ பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

அப்டேட்டில் இல்லை!

மருத்துவமனை முதல்வர் பணியிடம் நிரப்பவில்லை எனும் சீமான் அப்டேட் ஆகாமல் இருக்கிறார். அண்மையில் 20க்கும் மேற்பட்ட மருத்துவமனை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சியை சேர்ந்த சீமான் இது கூட தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

அப்டேட் அரசியல்வாதி என நினைத்துக் கொண்டிருந்தவர்கள், காலாவதியான அரசியல்வாதியாக மாறி உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மீது களங்கம் ஏற்படுத்த இ.பி.எஸ்., முயற்சி செய்கிறார். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us