sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எல்லாம் தோல்வி பயம் தான்; தி.மு.க., திடீர் U-TURN ; ராமதாஸ் விமர்சனம்

/

எல்லாம் தோல்வி பயம் தான்; தி.மு.க., திடீர் U-TURN ; ராமதாஸ் விமர்சனம்

எல்லாம் தோல்வி பயம் தான்; தி.மு.க., திடீர் U-TURN ; ராமதாஸ் விமர்சனம்

எல்லாம் தோல்வி பயம் தான்; தி.மு.க., திடீர் U-TURN ; ராமதாஸ் விமர்சனம்

12


UPDATED : நவ 13, 2024 08:44 PM

ADDED : நவ 13, 2024 07:12 PM

Google News

UPDATED : நவ 13, 2024 08:44 PM ADDED : நவ 13, 2024 07:12 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வரும் 2026 சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க தி.மு.க., அரசு முடிவு செய்திருப்பதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தால் வரவேற்கத் தக்கது.

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பின்னாளில் இத்திட்டத்தை செயல்படுத்திய தி.மு.க., அரசு, சாத்தியமற்ற தகுதிகளை நிர்ணயித்து, அதை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 2 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தி.மு.க., அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், எந்த நிபந்தனையும் இல்லாமல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால் தான் இப்படியொரு அறிவிப்பை தி.மு.க., அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது தி.மு.க.,வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான்.

ஆனாலும், தி.மு.க., அரசின் இத்தகைய நாடகங்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள். 2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அதன் பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியது. அதன் பின்னர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனைவருக்கும் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தி.மு.க., அரசின் உண்மை நோக்கத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இதைக் கண்டு ஏமாற மாட்டார்கள். 2026ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., வீழ்த்தப்படுவது உறுதி, என தெரிவித்துள்ளார்.

'

தகுதியுள்ள' ரொம்ப முக்கியம்

முதல்வரின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரன்








      Dinamalar
      Follow us