sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்

/

ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்

ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்

ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்

92


UPDATED : டிச 25, 2025 10:29 PM

ADDED : டிச 24, 2025 03:04 PM

Google News

92

UPDATED : டிச 25, 2025 10:29 PM ADDED : டிச 24, 2025 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இஸ்லாமிய பெண் தாரிகா சல்மான், ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியின்போது, ஈ.வெ.ரா குறித்து இவர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. தாரிகா சல்மான் பேசியதாவது: என் மண்ணில் வந்து பெண் அடிமையை சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. வேலு நாச்சியார், வெள்ளைக்காரனை எதிர்த்து சண்டையிட்டார். அவர் காலத்தில் பெண் அடிமையை யார் உடைத்தது? யார் பெண்களுக்கு தைரியத்தை கொடுத்தது? அவர் கையில் வாளை கொடுத்து சென்று, வென்று வா என வேலு நாச்சியாரை ஈ.வெ.ரா அனுப்பி வைத்தாரா? அவர் இறந்து 100 ஆண்டுகளுக்கு பிறகே ஈவெரா பிறந்தார்.

கருப்பை


அடிமை சங்கிலியை அறுப்பதாக போராட்டம் நடத்தி, அடுத்தவர்கள் பொண்டாட்டியின் தாலிகளை எல்லாம் அறுத்தார்கள். ஆனால், அவர்கள் வீட்டு பெண்களின் கழுத்தில் 20 பவுனில் தாலி தொங்குகிறது. கருப்பையை அறுத்து எறி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஈவெராவின் அம்மா அதை செய்திருந்தால் ஈவெரா எனும் தலைவலியே இருந்திருக்காது. அதே போல் ஈவெராவின் சிஷ்யர் கருணாநிதி தன் மனைவி, துணைவிக்கு இதனை சொல்லியிருந்தால், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என எந்த தலைவலியும் இருந்திருக்காது.

சூத்திரன்


ஆண்கள் போல முடி வெட்டுங்கள், உடை அணியுங்கள், ஆண்கள் போல் இருக்க வேண்டும் என ஈவெரா சொன்னதன் விளைவே இப்போது லெஸ்பியன், எல்.ஜி.பி.டி.க்யூ வரை நின்றிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து எதற்கு என கேட்டார். தமிழ்த்தாயை வாழ்த்தாமல் மணியம்மையையா வாழ்த்துவது? உலகத்தமிழ் மாநாடும், கும்பகோணம் மகாமகமும் ஒன்று என சொன்னவர் ஈவெரா. ஜாதிக் கொடுமைக்கு எதிரானவர் என்ற ஈவெரா, ஜாதியை ஒழிக்க என்ன செய்தார்?

பாரதியார், ‛வெள்ளை நிறத்தொரு பூனை' எனும் பாடலை எழுதினார். அதில் ‛எந்த நிறம் என்றாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ.. இந்த நிறம் சிறிதென்றோ, அந்த நிறம் ஏற்றம் என்றோ சொல்லலாமோ' என்றும் கூறியுள்ளார். ஒரே பாடலில் நிறவெறி உட்பட அனைத்தையும் சொல்லியவர் பாரதி. ஆனால் ‛சூத்திரன் ஒரு கோயிலில் எவ்வளவு தூரம் போகிறானோ, அதே அளவிற்கு தாழ்த்தப்பட்டவர்களும் போகலாம்' என காந்தியடிகள் சொன்னதற்கு, ஜாதியை ஒழிக்கிறேன் என நம் காதில் பூ சுற்றிய ஈவெரா, அவரின் விடுதலை பத்திரிகையில், பறையனும் சூத்திரனும் ஒன்றா என எழுதியுள்ளார்.

மேலும் சூத்திரன் என்பவர் இஸ்லாமியர் அல்லாத, கிறிஸ்தவர் அல்லாத ஆதித்திராவிடர் அல்லாத, மீதி திராவிடர்களே சூத்திரர்கள் என்கிறார். அப்படியெனில் அவர் சமூகத்தை சேர்ந்தவர்களையே சூத்திரர் என்கிறார். காமராஜர் கருப்பாக இருப்பதை ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் தெரியுமா. முன்பெல்லாம் எருமை மாட்டு தோலைத்தான் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்வார்கள், ஆனால் இப்போது எருமை மாடே ரஷ்யா செல்கிறது என்று பேசினார் ஈவெரா. இவர் ஜாதியை, தீண்டாமையை ஒழிக்க போராடினாரா?.

மது ஒழிப்பு


காங்கிரசுடன் இருக்கும் வரை மது ஒழிப்பு பற்றி பேசிய ஈவெரா, தனி திராவிட இயக்கம் துவங்கியதும், மது ஒழிப்பு ஒரு முட்டாள்த்தனம், கலவியை எப்படி கூடாது என சொல்ல முடியாதோ அதுபோல மது குடிப்போரையும் கூடாது என சொல்ல முடியாது என பேசினார். மதுவை ஒழித்தால் ஆண்டுக்கு 20 கோடி வருவாயை அரசு இழக்கும் என்று பேசிய ஈவெரா, எந்த போதைக்கு அடிமையானவர்?.

பெண்களுக்கு விடுதலை இல்லையெனில் இந்த மண்ணில் இருந்து என்ன பயன் என்றும் இந்த மண்ணில் இருக்கும் அனைத்தும் தெய்வம், என் மனைவியும் தெய்வம் என்றும் சொன்னவர் பாரதியார். அவரை பார்ப்பான் என விமர்சித்த ஈவெரா, கட்டுன பொண்டாட்டிய ஊருக்கு புதுசா வந்திருக்கிற தாசி என அறிமுகப்படுத்துகிறார். அவர் மனைவி நாகம்மை இறந்தபோது கூட, நான் ஒரு அடிமையை இழந்துவிட்டேன் என்று சொன்னார். பெண் விடுதலை என்பது பிறருக்கு தான், தன் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு அல்ல. இவ்வாறு அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பல இடங்களில் தாரிகா சல்மான் பேச்சை கை தட்டி வரவேற்றார்.






      Dinamalar
      Follow us