sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

1952 முதல் சட்டசபையில் நடந்ததை இணையதளத்தில் படிக்க வசதி

/

1952 முதல் சட்டசபையில் நடந்ததை இணையதளத்தில் படிக்க வசதி

1952 முதல் சட்டசபையில் நடந்ததை இணையதளத்தில் படிக்க வசதி

1952 முதல் சட்டசபையில் நடந்ததை இணையதளத்தில் படிக்க வசதி

10


ADDED : ஏப் 26, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 01:24 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

சட்டசபை மற்றும் மேல்சபை நடவடிக்கை குறிப்பு புத்தகங்கள், குழுக்களின் அறிக்கைகள், சபையில் வைக்கப்பட்ட ஏடுகள், வெளியீடுகள், புகைப்படங்கள், செய்தி துணுக்குகள், வீடியோ துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யும் பணி, மின் ஆளுமை முகமை மேற்பார்வையில் சட்டசபை செயலகத்தில் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக, 1952 முதல் 2024ம் ஆண்டு வரை, சட்டசபை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட tnlasdigital.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தியாகராஜன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறடா ராமச்சந்திரன், சட்டசபை செயலர் சீனிவாசன் பங்கேற்றனர்.

இது தொடர்பாக, சபாநாயகர் அப்பாவு நேற்று சட்டசபையில் கூறியதாவது:

கடந்த 2021 ஆகஸ்ட் 21ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக, 1952 முதல் 2024 வரை சட்டசபை, மேல்சபை நிகழ்வுகளின் பதிவுகள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1921 முதல் 1952 வரையிலான சட்டசபை நிகழ்வுகளை கணினிமயமாக்குவதில், பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இப்பணிகள் முடிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us