sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பேன்சி' எண்கள் இனி ஏலம்: வரைவு விதிகள் வெளியீடு

/

'பேன்சி' எண்கள் இனி ஏலம்: வரைவு விதிகள் வெளியீடு

'பேன்சி' எண்கள் இனி ஏலம்: வரைவு விதிகள் வெளியீடு

'பேன்சி' எண்கள் இனி ஏலம்: வரைவு விதிகள் வெளியீடு

1


ADDED : ஆக 31, 2025 06:42 AM

Google News

ADDED : ஆக 31, 2025 06:42 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வாகனங்களுக்கான 'பேன்சி' எண்களை, ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் புதிய நடைமுறையை, தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. இது தொடர்பாக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து விதமான வாகனங்களுக்கும், அந்தந்த பகுதியில் உள்ள, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பதிவு எண் வழங்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் தாங்கள் விரும்பும் பதிவெண்களை வாங்க, தனி கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், வாகனங்களுக்கான பேன்சி எண்களை, ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில், புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய வரைவு விதிகளை தமிழக அரசு அரசிதழில், கடந்த 18ம் தேதி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனி அதிக தேவை உள்ள எண்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் ஏலம் விடப்படும். இதற்கான நுழைவுக் கட்டணம், 1,000 ரூபாய்.

பேன்சி எண் பெற விரும்புவோர், https://fancy.parivahan.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, எண்களை தேர்வு செய்ய வேண்டும். ஏலத்தில் வெற்றி பெற்றோர், 48 மணி நேரத்திற்குள் பணத்தை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us