ADDED : மார் 08, 2025 08:14 PM

திருநெல்வேலி: செயற்கை நுண்ணறிவு தளங்களில் கேட்டால், இந்தியாவில் தமிழக சட்டசபை தான் நடுநிலையாக நேர்மையாக செயல்படுகிறது எனக் கூறுவதாக தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆனால் அதை ஏ.ஐ., தளங்கள் மறுத்துள்ளன. இதனையடுத்து அவரின் கருத்துக்கு நெட்டிசன்கள் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்திய அளவில் சட்டசபைகளில் நடுநிலையோடு, நேர்மையாக, சுதந்திரமாக சட்டசபையை நடத்துவதில், சபாநாயகர் அப்பாவு தான் முதலிடத்தில் உள்ளார் என செயற்கை நுண்ணறிவு தளங்கள் கூறுவதாக தெரிவித்து இருந்தார்.
ஆனால், உலகில் முன்னணியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தளங்களில் இது குறித்து தகவல் தகவல் தேடப்பட்டது. ஆனால், அதனை அந்தத் தளங்கள் மறுத்து உள்ளன.
அப்பாவு பேட்டி சமூக வலைதளங்களில் வெளியானதும், அதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

