ADDED : நவ 21, 2025 12:20 AM

திருக்கோவிலுார்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, கனகனந்தலை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஜாகிதாபேகம், 37; இரு குழந்தைகள் உள்ளனர். கனகனந்த ல் கிராம உதவியாளரான ஜாகிதா பேகம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட சிவனார்தாங்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டிருந்தார்.
பணி முடிந்து, நேற்று மாலை, 4:30 மணியளவில் வீடு திரும்பிய அவர், வீட்டிலிருந்த ஊஞ்சல் சங்கிலியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை மீட்ட போலீசார், ஜாகிதாபேகம் பணியின்போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என, விசாரிக்கின்றனர்.

