sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கண்களை சிவப்பாக்கும் காய்ச்சல்; ஜனவரி வரை எச்சரிக்கை அவசியம்

/

கண்களை சிவப்பாக்கும் காய்ச்சல்; ஜனவரி வரை எச்சரிக்கை அவசியம்

கண்களை சிவப்பாக்கும் காய்ச்சல்; ஜனவரி வரை எச்சரிக்கை அவசியம்

கண்களை சிவப்பாக்கும் காய்ச்சல்; ஜனவரி வரை எச்சரிக்கை அவசியம்

1


ADDED : நவ 26, 2024 12:30 AM

Google News

ADDED : நவ 26, 2024 12:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'கண்களை சிவக்கச் செய்யும் பாதிப்புடன் கூடிய காய்ச்சல் அதிகரித்து வருவதால், ஜனவரி மாதம் வரை எச்சரிக்கை அவசியம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில், 'ப்ளூ வைரஸ்' வகையைச் சேர்ந்த, 'இன்ப்ளூயன்ஸா ஏ அண்டு பி' வகை காய்ச்சல்கள், 75 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அத்துடன், 11 வகையான வைரஸ் பாதிப்புகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு வைரஸ் பாதிப்பு குணமடைந்த ஓரிரு வாரங்களில், மற்றொரு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கண்ணில் நீர் வடிதல், சிவந்து காணப்படுதல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் கூடிய காய்ச்சலால் தற்போது அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, பள்ளி செல்லும் சிறார்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:


தட்ப வெப்பநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஜனவரி மாதம் வரை தொடரும்.

பெரும்பாலும், 'இன்ப்ளூயன்ஸா' வகை காய்ச்சல் என்பதால், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேநேரம், பாதிப்பு கண்டறியப்பட்டதும், உரிய டாக்டரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம். குழந்தைகள், சிறார்களை, பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை, பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us