ஜாபர் சாதிக்குடன் தொடர்புள்ள அனைவரையும் கண்டறிக: அண்ணாமலை வலியுறுத்தல்
ஜாபர் சாதிக்குடன் தொடர்புள்ள அனைவரையும் கண்டறிக: அண்ணாமலை வலியுறுத்தல்
UPDATED : மார் 09, 2024 05:48 PM
ADDED : மார் 09, 2024 04:04 PM

சென்னை: மாஜி திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்குடன் தொடர்புள்ள அனைவரையும் கண்டறிய வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான மாஜி திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு பா.ஜ., சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

