தீயணைப்புத்துறை துணை இயக்குனரிடம் ரூ. 2.51 லட்சம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
தீயணைப்புத்துறை துணை இயக்குனரிடம் ரூ. 2.51 லட்சம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
ADDED : நவ 18, 2025 04:06 PM

திருநெல்வேலி: தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது
திருநெல்வேலி மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியில் தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கட்டிடங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது இத்துணை இயக்குநர் அலுவலகத்தின் பொறுப்பாகும். இதில் முறைகேடு நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறையின் கூடுதல் எஸ்.பி. எஸ்கால் தலைமையில் குழு திடீர் சோதனை மேற்கொண்டது.
சோதனையின் போது, துணை இயக்குநர் சரவணபாபு அமர்ந்திருக்கும் இருக்கைக்கு எதிர்ப்புற அலமாரியில் உள்ள பைல்களுக்குள் 6 கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2,24,100 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், துணை இயக்குநரின் டிரைவராக பணிபுரியும் தீயணைப்பு வீரர் செந்தில்குமார் வசம் ரூ.27,400 ரொக்கம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்தப் பணத்துக்கு அலுவலர்களால் எந்த கணக்கும் சொல்ல முடியவில்லை. மொத்தம் ரூ.2,55,500 லஞ்சத் தொகை என சந்தேகிக்கப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்புடையவர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

