sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஓட்டுப்பதிவு மிஷின்களில் முதல்கட்ட சோதனை

/

 ஓட்டுப்பதிவு மிஷின்களில் முதல்கட்ட சோதனை

 ஓட்டுப்பதிவு மிஷின்களில் முதல்கட்ட சோதனை

 ஓட்டுப்பதிவு மிஷின்களில் முதல்கட்ட சோதனை


ADDED : டிச 06, 2025 02:00 AM

Google News

ADDED : டிச 06, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபை தேர்தலை ஒட்டி ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முதல்கட்ட சோதனை செய்யப்பட்டது.

தமிழகத்தில், 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை, இந்திய தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவிகளை இயக்குவது தொடர்பான பயிற்சி, சென்னையில் நேற்று நடந்தது.

இதில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள், முதல்நிலை பரிசோதனைக்கான மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

தலைமை தேர்தல் கமிஷன் துணை ஆணையர் பானு பிரகாஷ் யெத்துரு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இந்திய தேர்தல் கமிஷன் செயலர் மதுசூதனன், கர்நாடகா மாநில இணை தலைமை தேர்தல் அதிகாரி ராகவேந்த்ரா ஆகியோரும் பங்கேற்றனர்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இயக்கம் தொடர்பாக, பெங்களூரில் உள்ள, 'பாரத் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவன வல்லுனர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us