sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அணை திறப்புக்காக 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை: அமைச்சர் துரைமுருகன்

/

அணை திறப்புக்காக 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை: அமைச்சர் துரைமுருகன்

அணை திறப்புக்காக 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை: அமைச்சர் துரைமுருகன்

அணை திறப்புக்காக 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை: அமைச்சர் துரைமுருகன்

17


ADDED : டிச 03, 2024 01:06 PM

Google News

ADDED : டிச 03, 2024 01:06 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சாத்தனூர் அணை திறப்பின் போது 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனர்' என அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதாக , அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ராமதாஸ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி இருந்தனர். இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து உள்ளார்.

அவரது அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது.

சாத்தனூர் அணை திறப்பின் போது 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 5வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு டிச.,2ல் 1.80 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

அதிகப்படியான மழையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவலைப் பரப்புக்கின்றனர். சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டது. அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் உயிர்சேதத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அணை திறப்பின் மூலம் பெரிய பாதிப்போ, உயிரிழப்போ ஏற்படாமல் அரசு மக்களை பாதுகாத்தது.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் குறித்து அடுத்தடுத்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. இதனையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உயிர்கள் விஷயத்திலும் எதிர்க்கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டும் அள்ளி வீசுகின்றன. பொய்கள் என்றுமே விலை போகாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us