sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதைக்காக மருந்துகள் விற்பனை; கண்டறிந்து தடுக்க போகிறது பறக்கும் படை

/

போதைக்காக மருந்துகள் விற்பனை; கண்டறிந்து தடுக்க போகிறது பறக்கும் படை

போதைக்காக மருந்துகள் விற்பனை; கண்டறிந்து தடுக்க போகிறது பறக்கும் படை

போதைக்காக மருந்துகள் விற்பனை; கண்டறிந்து தடுக்க போகிறது பறக்கும் படை

1


ADDED : ஜூலை 29, 2025 05:32 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:32 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில், போதைக்காக வலி நிவாரண மருந்து பயன்பாடு, கருத்தடை மாத்திரை விற்பனையை கண்டறிந்து தடுக்க, மாவட்டந்தோறும் புதிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நடந்த சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில், வலி நிவாரண மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவது மற்றும் விதிமீறிய கருத்தடை மாத்திரை விற்பனையை கண்டறிந்து தடுக்க, பறக்கும்படை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே, சென்னை மற்றும் மதுரையில் பறக்கும் படை உள்ள நிலையில், தற்போது, மாவட்டம் தோறும், புதிய சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

தற்சமயம், ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த பறக்கும் படையினர், வேறு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

வலி நிவாரணி, ஆன்டிபயாடிக், ஆன்டி எபிலெப்டிக், அபார்ஷன் கிட் மருந்துகளின் கொள்முதல், இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை சேகரிக்கின்றனர். விதிமீறல் கண்டறியப்பட்டால், மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கின்றனர்.

மருந்து கட்டுப்பாட்டு கோவை மண்டல உதவி இயக்குநர் மாரிமுத்து கூறியதாவது:

சிறப்பு பறக்கும் படையினர், மாதந்தோறும், இருமுறை ஆய்வு நடத்துவர். பறக்கும் படை ஆய்வின்போது, அந்தந்த பகுதி மருந்தக ஆய்வாளர்கள் உடன் இருப்பர்.

முதல்கட்ட ஆய்வில், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக் கிய கோவை மண்டலத் தில், நான்கு மருந்து கடைகள் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- - நமது நிருபர்-






      Dinamalar
      Follow us