பிரதமர் மோடி தரிசித்த பிரகதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி; குவிந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
பிரதமர் மோடி தரிசித்த பிரகதீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி; குவிந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
ADDED : பிப் 15, 2026 09:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்: கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், வரலாற்று சிறப்புமிக்கது. இக்கோவிலில், 2025ல் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில், சிவராத்திரியை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பிரகதீஸ்வரர் கோவிலின் கட்டடக்கலையை கண்டு ரசித்ததுடன், பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணியரோடு 'செல்பி' போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

