sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட 'மாஜி' அமைச்சர் கைது

/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட 'மாஜி' அமைச்சர் கைது

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட 'மாஜி' அமைச்சர் கைது

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட 'மாஜி' அமைச்சர் கைது


ADDED : அக் 25, 2024 09:52 PM

Google News

ADDED : அக் 25, 2024 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரத்தில், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் கைது செய்யப்பட்டார்.

திண்டிவனத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகம், நேற்று காலை, 11:45 மணிக்கு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்று, எஸ்.பி.,யை சந்திக்க காத்திருந்தார். 'எஸ்.பி., தீபக் சிவாச், ஐ.ஜி., மீட்டிங்கிற்கு விக்கிரவாண்டிக்கு சென்றுள்ளதால், வர தாமதமாகும்' என, போலீசார் கூறினர். 30 நிமிடம் காத்திருந்த சண்முகம், 12:15 மணிக்கு, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அவரிடம், டி.எஸ்.பி., கார்த்திகேயன் மனு அளிக்க அழைத்தார். அதற்கு அவர், 'மூன்றாண்டாக, 20க்கும் மேற்பட்ட புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இன்று காலை தகவல் கூறிவிட்டு தான், எஸ்.பி.,யை சந்தித்து மனு அளிக்க வந்தேன். ஆனால் அவர், என்னை புறக்கணித்துவிட்டு எங்கோ செல்கிறார். மக்கள் பிரதிநிதியை அவமதிப்பதா? எஸ்.பி., வரட்டும்; அலுவலகத்திற்குள் வருகிறேன்' என்றார்.

தொடர்ந்து, டி.எஸ்.பி, தலைமையிலான போலீசார், தர்ணாவில் ஈடுபட்ட சண்முகத்தை, 1:00 மணியளவில் கைது செய்து, ஜீப்பில் ஏற்றினர். உடன் நகர செயலர், ஒன்றிய செயலர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் போலீஸ் ஜீப் முன் மறியில் ஈடுபட்டனர். ஜீப்பில் இருந்து சண்முகம் இறங்கி வந்து, வழிவிட கூறியதும், கட்சியினர் மறியலை கைவிட்டனர். பின்னர், அவரை போலீசார், விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, மாலை 3:00 மணிக்கு விடுவித்தனர்.

வழக்குப்பதிய மறுப்பது ஏன்?


மூன்றாண்டுகளில் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது; ஒரே நாளில் மொபைல் போனில், 400 முறை மிரட்டல்கள் வந்தன. கடந்த லோக்சபா தேர்தலின் போது, போலி லெட்டர் பேட் மூலம், அரசியல் ரீதியாக தவறாக சித்தரித்து, அவதுாறு தகவல் பரப்பினர். கடந்த மாதம், வி.சி., கட்சியின் மதுவிலக்கு மாநாட்டில் நான் பங்கேற்பேன் என கூறியதாக, போலியாக செய்தி வெளியிட்டு, அவதுாறு பரப்பினர்.
இதுதொடர்பாக, திண்டிவனம் போலீஸ் ஸ்டேஷன், விழுப்புரம் குற்றப்பிரிவு, சைபர் கிரைம் மற்றும் எஸ்.பி., என, 20 முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்தவரை போலீசார் பிடித்து, மன்னித்து அனுப்புகின்றனர். வீட்டை நோட்டமிட்டு படம் எடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை. இப்புகார்கள் மீது வழக்குப்பதிய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும், நடவடிக்கை இல்லை. சண்முகம், அ.தி.மு.க., - எம்.பி.,








      Dinamalar
      Follow us