sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்; கோவை கமிஷனரிடம் புகார்!

/

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்; கோவை கமிஷனரிடம் புகார்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்; கோவை கமிஷனரிடம் புகார்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்; கோவை கமிஷனரிடம் புகார்!


ADDED : மே 23, 2025 02:52 PM

Google News

ADDED : மே 23, 2025 02:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை கமிஷனரிடம் அ.தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்று கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்தது. அந்த கடிதத்தில், ''வரும் ஜூலை மாதம் 30ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது. அதில் நாங்கள் உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளோம்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து கோவை கமிஷனரிடம் அ.தி.மு.க., புகார் மனு அளித்துள்ளது. மனுவில், ''முன்னாள் அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

கோவையில் வெடிகுண்டு வெடிக்க சதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us