சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி உயிரிழப்பு
சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி உயிரிழப்பு
UPDATED : மே 22, 2025 10:07 PM
ADDED : மே 22, 2025 10:00 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு அருகே நடந்த விபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி திவ்யப்பிரியா(28) உயிரிழந்தார்.
திவ்யப்பிரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர், கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி(48) பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றார். இன்று( மே 22) மாலை காரில் மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தார். பார்த்திபன் என்பவர் காரை ஓட்டி வந்தார். கல்லாறு முதல் வளைவு அருகே வந்த போது கார் பிரேக் பிடிக்காமல் மரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில், திவ்யப்பிரியா, பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வளர்மதி லேசான காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர்அ, அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திவ்யப்பிரியா வரும்வழியிலேயே உயிரிழந்தார். மற்ற இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.