sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்னாள் எம்.பி., மலைச்சாமி மரணம்

/

முன்னாள் எம்.பி., மலைச்சாமி மரணம்

முன்னாள் எம்.பி., மலைச்சாமி மரணம்

முன்னாள் எம்.பி., மலைச்சாமி மரணம்


ADDED : நவ 07, 2024 01:47 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மாநில தேர்தல் ஆணையர், உள்துறை செயலர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்த, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யுமான மலைச்சாமி, 87, நேற்று காலமானார்.

சிவகங்கை மாவட்டம், ஆண்டக்குடி கிராமத்தில் பிறந்தவர் மலைச்சாமி, 1978ம் ஆண்டு நவ., 15ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். சென்னை வேளாண் துறையில் இணை இயக்குனராக, தன் அரசு பணியை துவக்கினார்.

அதன்பின், மதுரை மாநகராட்சி கமிஷனர், கோவை கலெக்டர், வேளாண் துறை இயக்குனர், சென்னை மாநகராட்சி கமிஷனர், உள்துறை செயலர், மாநிலத் தேர்தல் ஆணையர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

கடந்த 1994ம் ஆண்டு ஜூலை 14ல், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், அ.தி.மு.க.,வில் இணைந்து ராஜ்யசபா எம்.பி., ஆனார். சென்னை, அண்ணா நகர் இரண்டாவது தெருவில் உள்ள, தனது மகள் மலர்விழி வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று காலை 10:30 மணிக்கு காலமானார். இவரது இறுதிச்சடங்கு, நாளை காலை 10:30 மணிக்கு நடக்க உள்ளது.

மலைச்சாமி மரணத்திற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us