டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கும் நரிக்குறவர்கள்
டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கும் நரிக்குறவர்கள்
ADDED : ஜன 21, 2025 05:26 AM

திருப்புத்துார்: டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க, சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் நரிக்குறவர் தம்பதி அங்கு செல்கின்றனர்.
டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க, மாநில அரசு பல துறைகளைச் சேர்ந்தவர்களை தேர்வு செய்கிறது.
இம்முறை தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில், திருப்புத்துாரைச் சேர்ந்த நரிக்குறவர் தம்பதி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
திருப்புத்துார் இந்திரா நகர், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் ராஜு, 57, மற்றும் அவரின் மனைவி சுமதி, 50, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குடியரசு தின விழாவில் பங்கேற்க சென்னைக்கு இந்த தம்பதி நேற்று புறப்பட்டனர். சென்னையிலிருந்து அதிகாரி துணையுடன் விமானம் மூலம் நாளை டில்லி செல்கின்றனர்.
டில்லியில் குடியரசு தின விழாவில் பார்வையாளராக பங்கேற்கின்றனர். தொடர்ந்து, ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறும் தேநீர் விருந்திலும் பங்கேற்க உள்ளனர்.

