sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய அமைச்சர் மீது மோசடி வழக்கு

/

மத்திய அமைச்சர் மீது மோசடி வழக்கு

மத்திய அமைச்சர் மீது மோசடி வழக்கு

மத்திய அமைச்சர் மீது மோசடி வழக்கு


ADDED : ஜூலை 24, 2011 05:43 AM

Google News

ADDED : ஜூலை 24, 2011 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட்டு பெற்றுத் தருவதாக, 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகன், அவரது மகன், மகள் மற்றும் பலர் மீது, புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாம்பரத்தை அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் முரளி, 45.

இவர், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் நடத்துவதாகக் கூறப்படும் மருத்துவக் கல்லூரியில், தனது மகளுக்கு சீட்டு பெற, 13.5 லட்சம் ரூபாய் கொடுத்தார். அதேபோல, அண்ணாநகரைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர், தனது மகனுக்கு இதே மருத்துவக் கல்லூரியில் சீட்டு கேட்டு விண்ணப்பித்திருந்தார். 18.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் மருத்துவச் சீட்டு தருவதாகக் கூறி, அமைச்சரின் உறவினர் காமராஜ் பெற்றுக் கொண்டார்.

சொன்னபடி, முரளி மற்றும் சிவசங்கருக்கு மருத்துவக் கல்லூரியில் சீட்டு தரவில்லை; பணத்தையும் திருப்பித் தராமல் காமராஜ் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து முரளி மற்றும் சிவசங்கர், புறநகர் கமிஷனர் கரன்சின்காவிடம் புகார் அளித்தனர்.

புறநகர் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கோவிந்தராஜை, விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டனர். அதன்படி, முரளி மற்றும் சிவசங்கர் கொடுத்த புகாரின்படி, மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், அவரது மகன் சந்தீப் ஆனந்த், மகள் ஸ்ரீநிஷா, உறவினர் காமராஜ், கர்ணல், கஜேந்திரபாபு, ரித்தீஷ் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.








      Dinamalar
      Follow us