sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு; பதில் மனு தாக்கல்

/

 ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு; பதில் மனு தாக்கல்

 ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு; பதில் மனு தாக்கல்

 ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு; பதில் மனு தாக்கல்


ADDED : ஜன 06, 2026 05:18 AM

Google News

ADDED : ஜன 06, 2026 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தாக்கல் செய்த மனுவிற்கு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக 2021ல் குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் அளித்தார். இதுதொடர்பாக விஜய் நல்லதம்பி, ராஜேந்திர பாலாஜி, முத்துப்பாண்டி, மாரியப்பன், பாண்டியராஜன், ரவி கணேசன், ராமகிருஷ்ணன், நாகேஷ் ஆகியோர் மீது ஒரு வழக்கும், ராஜேந்திர பாலாஜி பணம் பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக விஜய நல்ல தம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்க கோரி ராஜேந்திர பாலாஜி, முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராம், பாண்டியராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நேற்று இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ராஜேந்திர பாலாஜி, நல்லதம்பி ஆஜராகவில்லை. மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., உதயசூரியன், நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அனைத்து மனுக்களின் மீதான விசாரணை ஜன., 23 அன்று நடக்கும் எனக்கூறி, விசாரணையை நீதிபதி ஜெயக்குமார் ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us