sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாஸ்மாக் மதுவில் தவளை; மதுப்பிரியர் 'அட்மிட்'

/

டாஸ்மாக் மதுவில் தவளை; மதுப்பிரியர் 'அட்மிட்'

டாஸ்மாக் மதுவில் தவளை; மதுப்பிரியர் 'அட்மிட்'

டாஸ்மாக் மதுவில் தவளை; மதுப்பிரியர் 'அட்மிட்'

16


ADDED : ஜன 15, 2025 04:51 AM

Google News

ADDED : ஜன 15, 2025 04:51 AM

16


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: தவளை கிடந்த டாஸ்மாக் மதுவை குடித்தவர், -அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள சென்னக்கரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், 33, கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் சிறுகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், மது பாட்டில் வாங்கினார்.

சென்னக்கரை பஸ் ஸ்டாப்பில், இருட்டில் அமர்ந்து அந்த மதுவை குடித்த போது, பாட்டிலில் அடைப்பு இருந்ததை அவர் உணர்ந்தார்.

உடனே, மொபைல் போன் டார்ச் லைட் அடித்து பார்த்த போது, மது பாட்டிலுக்குள் இறந்து நிலையில் தவளை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மது பாட்டிலுடன் டாஸ்மாக் கடைக்கு சென்ற வேல்முருகன், அங்கு விற் பனையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் கூறினார்.

அதை பொருட்படுத்தாத டாஸ்மாக் ஊழியர்கள், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கையில் இருந்த மது பாட்டிலை பறித்து, கீழே வீசி உடைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறுகாம்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us